திருமண சட்டம்
பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி?
இரு மனங்கள் ஒப்பி உடன் வாழ்வதே திருமணம். திருமணம் என்ற சடங்கு நடந்து விட்ட காரணத்தாலேயே இரு முரண்பட்ட மனங்கள் உடன் வாழ்வது தேவையில்லாதது.
‘திருமணம் என்பது ஒரு சமூக ஒப்பந்தம் மட்டுமே’ என்பதை புரிந்து கொண்டால், திருமணம் என்ற சடங்கில் எந்த தெய்வீகத்தன்மையோ, புனிதத்தன்மையோ இல்லை என்பதை புரிந்து கொண்டால் ‘மணவிலக்கு’ என்ற சொல் எந்த விதத்திலும் அச்சுறுத்தாது. ![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEvAPCgqcyySIWiqFeQRgTamGI-2tedyUlZrfZXBtSHWSJ6EtIfJXsp_Jy1HRJUSaF6fw010vRWam381rYDk7Wq7KdyhGAI58asARc9VwtNyKkpjWYVGUR4bkHm1UACzQ0_hJRGB2odbY/s400/Divorce_Main.jpg)
இரு மனங்கள் இணையும் திருமணத்தில், ஏதோ ஒரு மனம் உடன்பட முடியாவிட்டால் திருமணத்திற்கு முன்னரே பிரிவது அனைவருக்கும் நலம் பயக்கும். ஆனால் இந்திய திருமணச் சூழலில் திருமணத்திற்கு முன் மணம் செய்து கொள்ளவிருக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. ![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixQG_TgHfs20F-RihK5MFKC6veT3fXT3QA_dRxbSr0aRgz45mnMFEh_pMeY__kL6NK4EKRTTYAHzAYYI4BSLJSUZ8o4uRfkqxYv9_6lYfb-mXLD4NARHwv6tdxcqs-ySqWCIxOvvUYROE/s400/untitled.bmp)
உரிய காரணம் இன்றி பிரியும் துணையை மீண்டும் அழைக்க ‘மணவாழ்வுரிமை மீட்பு சட்டம்’ பயன்படுகிறது.
பொருந்தாத திருமணத்திற்குப்பின், பிரிவதைத்தவிர வேறு வழியில்லை என்று முடிவெடுப்பவர்களுக்கும் சட்டம் வழிகாட்டுகிறது.
சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவு 27, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13, (கிறிஸ்தவர்களுக்கான) இந்திய திருமண முறிவுச் சட்டம் ஆகியவை மத சடங்குகளில் ஈடுபாடு இல்லாதவர்கள் (Agnostics), நாத்திகர்கள் (Atheists), இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியவர்களுக்கான மணமுறிவு உரிமைகளை விளக்குகின்றன.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEvAPCgqcyySIWiqFeQRgTamGI-2tedyUlZrfZXBtSHWSJ6EtIfJXsp_Jy1HRJUSaF6fw010vRWam381rYDk7Wq7KdyhGAI58asARc9VwtNyKkpjWYVGUR4bkHm1UACzQ0_hJRGB2odbY/s400/Divorce_Main.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixQG_TgHfs20F-RihK5MFKC6veT3fXT3QA_dRxbSr0aRgz45mnMFEh_pMeY__kL6NK4EKRTTYAHzAYYI4BSLJSUZ8o4uRfkqxYv9_6lYfb-mXLD4NARHwv6tdxcqs-ySqWCIxOvvUYROE/s400/untitled.bmp)
பொருந்தாத திருமணத்திற்குப்பின், பிரிவதைத்தவிர வேறு வழியில்லை என்று முடிவெடுப்பவர்களுக்கும் சட்டம் வழிகாட்டுகிறது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioQqesuLTkF0Fda8uvkTtAtPQVdG2TZDGaoiHzOVBIgDswrxvtIvhlRSlpb0n_SVaCiTfs1s6WjfW47sdBxJzGuccAHy_oXZ6E9KgqwL3jt7d79oIi3MnV6z-ph-6a_8TJsTH9oe1j-y0/s400/divorce1.jpg)
சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி
1. வாழ்க்கைத் துணைவர் அல்லாத வேறொருவருடன் விரும்பி உடலுறவு கொள்ளுதல்,
2. மனுதாரரை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ கொடுமை செய்தல்,
3. மனுதாரரை இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு கைவிட்டுச் செல்லுதல்,
4. தம்பதிகளில் ஒருவர் தீர்க்க முடியாத அளவில் மனநோய்க்கு ஆளாதல்,
5. தம்பதிகளில் ஒருவர் எளிதில் தொற்றக்கூடிய பால்வினை நோயால் பாதிக்கப்படுதல்,
6. தம்பதிகளில் ஒருவர் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு மேலாக உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்பதை தெரியாதிருத்தல்,
7. திருமணமான கணவன் ஓரினப்புணர்ச்சி(Sodomy), விலங்குகளுடன் புணர்ச்சி (Bestiality) கொண்ட குற்றம் செய்தல்,
8. தம்பதிகளில் ஒருவர் இந்திய தண்டனை சட்டத்தில் கூறப்பட்டுள்ள குற்றம் ஒன்றிற்காக ஏழு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை பெறுதல்
ஆகிய சூழ்நிலைகளின்போது பாதிக்கப்பட்டவர் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு கேட்டு மனுச் செய்யலாம்.
இந்து திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்தவர்கள், காரணம் 8 தவிர மேற்கண்ட காரணங்களுக்காகவோ, கணவரோ/மனைவியோ இல்லறத்திலிருந்து விலகி துறவறம் மேற்கொண்டாலோ, இந்து
மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறினாலோ அதைக்காரணமாக கூறி மணவிலக்கு கோரலாம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzrTeFeOQjWHwzA2DG2sEqkKiZmGZH4KyZk6H00e8kQ8c61SLciPtTogmYgIAwMAPzOcjX1Ea_I8kc1Vvk3C4UJUgXOMVM4vtL-C8HQt9091L9bcZaY52CXxQSBkbL94QIn9FH-Q_zNk8/s400/hindu-wdg.jpg)
கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்த ஒரு ஆண், மனைவியை மணவிலக்கு செய்ய வேண்டுமெனில், திருமணத்திற்கு பின்னர் மனைவி மாற்றானுடன் உடலுறவு செய்தால் மட்டும் அதை நிரூபித்து மணவிலக்கு கோரலாம்.
1. திருமணத்திற்கு பின் கிறிஸ்தவ மதத்தொழிலை விட்டு விலகி வேறு மதம் சார்ந்த தொழிலை மேற்கொண்டாலோ,
2. உடலுறவு கொள்ளத் தடை செய்யப்பட்ட உறவு முறையில் உள்ள வேறு ஒரு பெண்ணோடு உடலுறவுக் குற்றம் (incestuous adultery) புரிந்தாலோ,
3. மற்றொரு பெண்ணை இரண்டாவதாக மணம் செய்து கொண்டு அவளுடன் பிறன்மனைப் புணர்ந்தாலோ (bigamy with adultery),
4. வன்முறைப்புணர்ச்சி, இயற்கைக்கு மாறான புணர்வு, விலங்குகளுடன் புணர்தல்,
5. நெறிகெட்ட வாழ்க்கை காரணமாக பெண்ணை கொடுமை செய்தாலோ,
6. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மனைவியை துறந்து சென்று விட்டாலோ,
... மனைவி மணவிலக்கு கோரி உரிய நீதிமன்றத்தில் மணவிலக்கு கோரலாம்.
இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கான சட்டமும் மணவிலக்கு குறித்த அம்சங்களை விவரிக்கிறது.
மனைவிக்கு காரணத்தை தெரிவிக்காமலே “தலாக்” எனப்படும் மணமுறிவை அறிவிக்க இஸ்லாமிய ஆண் உரிமை படைத்தவனாகிறான். மேலும் மனைவிக்கு தெரிவிக்காமலே கூட தலாக்கை செயல்படுத்தும் திறன் இஸ்லாமிய ஆண்களுக்கு இருக்கிறது. இதில் நீதிமன்றம் தலையிடுவதில்லை.
இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்லாமியர்கள் திருமண இழப்பு சட்டம், 1939ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி
- நான்கு ஆண்டுகளுக்கு மேல் கணவன் காணாமல் போய்விட்டால்,
- மனைவிக்கு தேவையான பராமரிப்பு செலவுத்தொகையை கணவன் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு கொடுக்கத்தவறினால்,
- கணவனுக்கு ஏழு ஆண்டுகளோ, அதற்கு அதிகமாகவோ சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால்,
- கணவனுக்கு விதிக்கப்பட்ட திருமணக்கடமைகளான மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுதல், குழந்தைகளை பராமரித்தல் ஆகியவற்றை கணவன் மூன்று ஆண்டுகளுக்கு புறக்கணித்தால்,
- கணவன் ஆண்மையற்று இருந்தால், தொழுநோய் பீடிக்கப்பட்டிருந்தால், தொற்றக்கூடிய பால்வினை நோய் இருந்தால், திருமணத்திற்கு தேவையான மனவளர்ச்சி இல்லாமலிருந்தால் ...
...பாதிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு பெறலாம்.
இத்தகைய வழக்கு விசாரணைகளை பொதுவில் நடத்தாமல், மூடிய அறைக்குள் நடத்தவும் (In Camera Proceedings), வழக்கு விவரங்களை செய்தியாளர்கள் வெளியிடாமல் தடுக்கவும் முடியும். வழக்கு தரப்பினர்கள் உடன்படும் நிலையில் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி இசைவின் பேரில் மணமுறிவு (Divorce by Mutual Consent) பெறவும் இயலும்.
இத்தகைய மணமுறிவு கேட்கும் தரப்பினர் உரிய வருவாய் இன்றி அவதியுறும் நிலையில், எதிர் தரப்பினர் வருவாய் படைத்தவர் என்று நிரூபிக்க இயலும் நிலையில் மனுதாரருக்கு தற்காலிக அல்லது நிரந்தர பராமரிப்பு கோரவும் இயலும்.
எனவே, பொருந்தா மண உறவில் யாரும் விருப்பமின்றி நீடிக்கவேண்டிய தேவையில்லை. எனவே துணிந்து முடிவெடுங்கள்.
அதற்கு முன் உங்கள் எதிர்காலம் குறித்தும், குழந்தைகள் (இருந்தால்) எதிர்காலம் குறித்தும் ஆழச் சிந்தித்துவிட்டு...!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhg07JUDzX-98ubHtUgBBTqf71qh__yZY5BkHEOdHlmOF7gTu43o4CBQGK8BXRDl-yztOmFY-VFXDq4AvMYsaIcrdFWwMAVQQEwN9-4C5FWycBAJDCX84LMkCWkJW-p4YVKvhM4kGmZQmA/s400/untitledchild.bmp)
-
பிரிந்த காதல் மனைவியை/கணவரை மீட்க சட்டம் உதவுமா?
ஆண்களுக்கும், பெண்களுக்கும் கிடைக்கும் உயர்கல்வியும், வேலைவாய்ப்பும் அவர்களது வாழ்க்கைத்தரத்தை வெகு உயரத்திற்கு கொண்டு சென்றுவிடுகிறது. பெற்றோர்கள் வாழ்வின் இறுதியில் பெற்ற ஊதியத்தைவிட அதிகமான சம்பளத்தை பெறும் இளைஞர்கள், பணத்தின் மூலமாகவே அனைத்தையும் அடைந்துவிட முடியும் என்றும் நினைத்து விடுகின்றனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4Jfh5XgvxlcGmebUynuXUEo-TioMJE203L_HSHwsO6ZYV4P_aZvgZZFRpzsVslcXcUGK_9lChsG_-6y3j9oWUCZkGR-au8b6QaayuFWmqJbLybt7A_rFEe4Q83NzpbWcSZG4AwzwXdeo/s400/divorce.jpg)
பெரும்பாலான காதல் திருமணங்களை சாதியும், மதமும், மொழியும் தீர்மானிக்காவிட்டாலும், பணியாற்றும் நிறுவனமும், ஊதியமும் நிர்ணயிக்கிறது என்பதை மறுக்க முடியாது. காதலின்போது காதலரின் நல்ல குணங்களே கண்களில் தெரிய காதலில் கசிந்துருகிய மனங்கள் திருமணம் என்ற பந்தத்திற்குள் இணைய விரும்புகின்றன. காதலிக்கும்போது ஒரு நாளின் சில மணிநேரங்கள் மட்டுமே சேர்ந்திருக்கும்போது தெரியாத, பல விவ(கா)ரங்கள் திருமணத்திற்குபின் வாழ்க்கை முழுவதும் இணைந்து வாழ முற்படும்போது தெரிந்து விடுகிறது.
திருமணத்திற்குபின் ஏற்படும் ஏமாற்றங்கள் கோபமாக மாறும்போது, அதற்கு சுற்றத்தில் உள்ளவர்கள் மேலும் எரிபொருள் ஊற்றி எரியவைக்கும்போது, பாதிக்கப்பட்டுள்ளதாக உணருபவரின் பொருளீட்டும் திறன் மிக முக்கிய கிரியா ஊக்கியாக அமைந்து திருமண வாழ்வை கேள்விக்குறியாக்குகிறது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPaH64int6vscUlDc-P63tuxuCl7pTRaPhjMZTwOtZh9cpL0fHaXt4WO9LqpLgfj8iq6ifQkaYb89Un3YeYRL7LQKoeyXpb2f-BrX1Huh5moLsagy3n8s4losQ7mY0mjGAslZsVYVpiUA/s400/divorce1.jpg)
கணவனோ, மனைவியோ திருமண வாழ்விலிருந்து பிரிந்து செல்லும் நிலை ஏற்படும்போது, அப்பிரிவை ஒரு முடிவுக்கு கொண்டுவந்து மணவாழ்வை மீண்டும் தொடர சட்டம் வழிகாட்டுகிறது.
மணவாழ்வு மீட்புரிமை சட்டம் (Restitution of Conjugal Rights) எனப்படும் இந்த சட்டம், சிறப்புத் திருமணச்சட்டம், இந்துத் திருமணச்சட்டம், கிறிஸ்தவ திருமணச்சட்டம் ஆகிய சட்டங்களின்கீழ் திருமணம் செய்தவர்களுக்கு பயனளிக்கிறது.
மணவாழ்வில் ஈடுபட்டுள்ள தம்பதிகளில் ஒருவர், ஏற்கக்கூடிய காரணம் இன்றி வாழ்க்கைத்துணையைவிட்டு பிரிந்து சென்றுவிட்டால், பாதிக்கப்பட்டவர் தமது தாம்பத்திய வாழ்க்கையை மீட்டுத்தருமாறு கோரி உரிய குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடரமுடியும்.
மணவாழ்வு மீட்புரிமை சட்டம் (Restitution of Conjugal Rights) எனப்படும் இந்த சட்டம், சிறப்புத் திருமணச்சட்டம், இந்துத் திருமணச்சட்டம், கிறிஸ்தவ திருமணச்சட்டம் ஆகிய சட்டங்களின்கீழ் திருமணம் செய்தவர்களுக்கு பயனளிக்கிறது.
மணவாழ்வில் ஈடுபட்டுள்ள தம்பதிகளில் ஒருவர், ஏற்கக்கூடிய காரணம் இன்றி வாழ்க்கைத்துணையைவிட்டு பிரிந்து சென்றுவிட்டால், பாதிக்கப்பட்டவர் தமது தாம்பத்திய வாழ்க்கையை மீட்டுத்தருமாறு கோரி உரிய குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடரமுடியும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXduB7mNby0H4WJm5RNSo9x1M5xQySmY3Hs-T9iGV_r2S7il5a0cV244-hs2nyIvuOWvqtTQexEaUvpuWWQnlnCuOqc1CHcTul5T4iyOHQfr4ySCPJ3m5KgNzAid6S6uuDtQ_n_YGIAf0/s400/divorce2.jpg)
சிறப்புத் திருமணச்சட்டத்தின் பிரிவு 22, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 9, இந்திய கிறிஸ்தவர்களுக்கான திருமண முறிவுச்சட்டம் ஆகியவை மணவாழ்வை மீட்பதற்கும், தாம்பத்திய வாழ்வை பெறுவதற்குமான உரிமைகளை வலியுறுத்துகின்றன.
இந்த சட்டங்களின் கீழ், பிரிந்து சென்ற வாழ்க்கைத்துணையுடன் மீண்டும் இணைந்து வாழவிரும்பும் ஒரு நபர் உரிய தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில், இதற்கான மனுவை பதிவு செய்ய வேண்டும்.
இந்த சட்டங்களின் கீழ், பிரிந்து சென்ற வாழ்க்கைத்துணையுடன் மீண்டும் இணைந்து வாழவிரும்பும் ஒரு நபர் உரிய தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில், இதற்கான மனுவை பதிவு செய்ய வேண்டும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYG0TIBHCdOBmuT2orH-YfM2q4PgDQex3U_8v3RKWx_Qwbq_cbfPrQhEiT-sGyacSt493QZN0DskFeZe7KPcSbLcsblrK9BttNeVyZGihHbCPyveR8CeEYmEXiswy48a-Br2bU96U-ZYA/s400/divorce12.jpg)
அந்த மனுவுடன் திருமணம் நடந்ததற்கான சான்றுகள், சேர்ந்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், குழந்தைகள் இருந்தால் அக்குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்கள், பிரிவு ஏற்படுவதற்கான காரணங்கள் (தெரிந்திருந்தால்), மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் ஆகியவற்றை குறித்து தெளிவான வாக்குமூலங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
இவற்றைப் பரிசீலித்து பார்க்கும் நீதிமன்றம், பிரிந்து வாழும் எதிர்தரப்பினருக்கு இந்த வழக்கு குறித்து தகவல் தெரிவித்து, அவர்களுடைய தரப்பை எடுத்துக்கூறுமாறு அழைப்பாணை (Summon) விடுக்கும். நிர்ணயிக்கப்பட்ட நாளில் எதிர்தரப்பினர் அந்த நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தங்கள் தரப்பை எடுத்துக்கூற உரிய வாய்ப்பு அளிக்கப்படும்.
இவற்றைப் பரிசீலித்து பார்க்கும் நீதிமன்றம், பிரிந்து வாழும் எதிர்தரப்பினருக்கு இந்த வழக்கு குறித்து தகவல் தெரிவித்து, அவர்களுடைய தரப்பை எடுத்துக்கூறுமாறு அழைப்பாணை (Summon) விடுக்கும். நிர்ணயிக்கப்பட்ட நாளில் எதிர்தரப்பினர் அந்த நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தங்கள் தரப்பை எடுத்துக்கூற உரிய வாய்ப்பு அளிக்கப்படும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2L3Y4I3zSsn_OVJVItviFapG3vsAfAlc4LpLjK-qF7k_XfdjseWrypueBF1ThxCxZjs8DCbmB2zXoQ55uXo7dJuS5ZwfdZE5Tg-X47roweI2IH0O2gT3cbWL8sUc01njZyt3dskFu264/s400/untitled.bmp)
மீண்டும் இணைந்து வாழ விரும்பாத நிலையில் எதிர்தரப்பினர் இருந்தால் அதற்கான காரணங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அந்த காரணங்கள் ஏற்கத் தகுந்ததாக இருந்தால், உரிய முறையில் மணவிலக்கு பெறுவதற்கான ஆலோசனையுடன் அந்த வழக்கு தீர்க்கப்படும். அதற்கான காரணங்களை உரிய சான்றாதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியது, பிரிந்து வாழும் எதிர்தரப்பினரின் கடமையாகவே கருதப்படும்.
பிரிந்து வாழ்வதற்கான காரணங்களை எதிர் தரப்பினர் உரிய முறையில் நிரூபிக்காவிட்டால், அவர் கூறும் காரணங்கள் ஏற்கத்தகுந்தது இல்லை என்று தீர்மானிக்கப்பட்டு, மனுதாரருடன் இணைந்து வாழுமாறு எதிர்தரப்பினருக்கு உத்தரவு வழங்கி வழக்கு தீர்க்கப்படும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkIc-3Ik3QBlgzGgAzbZEUWcGEhVd4qjGkJSCpPnFtVGerR-CIH1RGhFQgYZWO9Yx5MsbALKnYxvBpVmDQ2SK5mFGC3eSJargf-cCPyGK3sXKctVlEJ0JbttkJUt9QavnBbztF7fwKNSg/s400/untitled1.bmp)
சின்னஞ்சிறு அற்பக் காரணங்கள் காரணமாக வாழ்க்கைத்துணையை பிரிந்து தனிமையில் தவிக்கும் தம்பதிகளுக்கு தேவையான ஒரு சட்டமாகவே இந்த மணவாழ்வை மீட்டளிக்கும் இந்த சட்டம் செயல்படுகிறது. பிரிந்து சென்ற இணையர்கள் இருவரும் மீண்டும் சந்திக்கவும், மனம் விட்டு பேசி தங்கள் கருத்து வேறுபாடுகளை களைந்து கொள்ளவும் இந்த வழக்கின்போது தேவையான வாய்ப்புகள் உள்ளன.
சட்டரீதியாக மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாகவும் தம்பதிகள் இருவரும் மீண்டும் தங்கள் நிலையை சுயபரிசோதனை செய்து கொள்ளவும் எதிர்காலம் கருதி உரிய முடிவு மேற்கொள்ளவும் இந்த சட்டம் பயன்படுகிறது.
சட்டரீதியாக மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாகவும் தம்பதிகள் இருவரும் மீண்டும் தங்கள் நிலையை சுயபரிசோதனை செய்து கொள்ளவும் எதிர்காலம் கருதி உரிய முடிவு மேற்கொள்ளவும் இந்த சட்டம் பயன்படுகிறது.
திருமணப்பதிவு ஏன்? எப்படி?
திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கான ஒரு சமூக ஒப்பந்தம் என்ற கருத்து அண்மைக்காலத்தில்தான் உருவாகியுள்ளது. அதற்கு முன், திருமணம் என்பது மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்பட்டு வந்துள்ளது.
இருமனம் இணைந்தால் திருமணம் இல்லையா? என்ற கேள்விக்கு பழைய மதம் சார்ந்த சட்டங்கள் இல்லை என்ற பதிலையே கூறின. மதம் சார்ந்த சட்டங்கள் அனைத்தும் தொடக்கத்தில் மதம் கடந்த திருமணங்களை ஏற்கவில்லை என்பதே உண்மை. காலப்போக்கில் இந்த சட்டங்கள் பல மாறுதல்களை சந்தித்து ஓரளவிற்கு வளர்ந்துள்ளது. எனினும் நடைமுறையில் மதங்களை புறக்கணிக்கும் திருமணங்களை நிறைவேற்றுவதற்கோ, அவற்றை அங்கீகரிப்பதற்கோ மதம் சார்ந்த யாரும் தயாராக இருப்பதில்லை. அவர்களுக்கான ஒரே தீர்வு "சிறப்பு திருமணச் சட்டமே" ஆகும்.
எந்த சட்டத்தின்படி திருமணம் நடந்தாலும் அதைப்பதிவு செய்வது என்பது தற்போது காலத்தின் கட்டாயமாகிறது. ஏனெனில் சொத்துரிமை, வாரிசுரிமை, குழந்தையின் முறைபிறப்புத் தன்மை ஆகியவற்றை நிரூபிக்க திருமணச் சான்றிதழே முக்கிய சான்றாவணமாக பயன்படுகிறது. ![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjotdCoDLAqysRcgh0NKIctlhEwPuWHQUueXrQx_QH-0uH6lG7vqRM9Dq110trQZpWx0pOfraExmGgrdB6CCH0aXjidhw1EGOT3KoBwg_AiPiHWNlBWbKYIR5xM8n17A9MF99gPP1ab77o/s400/Indian%2520Wedding%2520SH02-0219.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjotdCoDLAqysRcgh0NKIctlhEwPuWHQUueXrQx_QH-0uH6lG7vqRM9Dq110trQZpWx0pOfraExmGgrdB6CCH0aXjidhw1EGOT3KoBwg_AiPiHWNlBWbKYIR5xM8n17A9MF99gPP1ab77o/s400/Indian%2520Wedding%2520SH02-0219.jpg)
மதம் சார்ந்த திருமணங்கள் முதலில் மதப்பழக்க வழக்கங்களின்படியே நடைபெறுகிறது. இதை பின்னர் திருமணப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வதே நடைமுறையில் உள்ளது. ஆனால் திருமணம் நடக்கும் இடத்திற்கே பதிவுத்துறை அதிகாரிகளை வரவழைத்து திருமணத்தை பதிவு செய்வதற்கும் வசதி உள்ளது.
இந்து திருமணத்தை பதிவு செய்தல்.
இந்து திருமணச் சட்டத்தின்கீழ் திருமணத்தை பதிவு செய்யவிருக்கும் மணமக்கள் இருவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். மணமக்கள் இருவரும் ஒரே சாதியை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் மாற்றப்பட்டுவிட்டது. எனவே சாதிகளை கடந்த மணமக்களும் இந்த சட்டத்தின்கீழ் திருமணம் செய்து அதை பதிவும் செய்யலாம். ![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgebVPVT66vq5fL2hTeyj21G9aqbmfyA5VjZKX5Isjs2SAJaP_CUsIOaa6cLF261Wf3j2ok6_0E37vj9TYj6uVYrMmi62wiVb_yAYnqgV1F9gT6cTkCRYqS0RfF8Cnbcti4Gpq-BVBYeck/s400/IndianWedding1.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgebVPVT66vq5fL2hTeyj21G9aqbmfyA5VjZKX5Isjs2SAJaP_CUsIOaa6cLF261Wf3j2ok6_0E37vj9TYj6uVYrMmi62wiVb_yAYnqgV1F9gT6cTkCRYqS0RfF8Cnbcti4Gpq-BVBYeck/s400/IndianWedding1.jpg)
மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் நிறைந்திருக்க வேண்டும். இந்து மதத்தின் எந்த ஒரு பிரிவு/சமூகத்தின் பழக்க வழக்கங்களின்படியோ, சுயமரியாதை திருமணமாகவோ இந்த திருமணம் நடக்கலாம். ![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6uBz4XV6UKdGVLd1IkUBGN74Z2K0GqEn594qqzVdKnkNdRHDbHt2mPjWsVmEaHbHGBflOCBo9ATTxrTlD5REBzp94gwqdFL2eSZJXtD_1WuOhUbI69Xz9ZDX31CwsFuRxyKD1RK_2KZg/s400/untitled2.bmp)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6uBz4XV6UKdGVLd1IkUBGN74Z2K0GqEn594qqzVdKnkNdRHDbHt2mPjWsVmEaHbHGBflOCBo9ATTxrTlD5REBzp94gwqdFL2eSZJXtD_1WuOhUbI69Xz9ZDX31CwsFuRxyKD1RK_2KZg/s400/untitled2.bmp)
மணமக்களின் வயதை உறுதி செய்யும் சான்றிதழ்கள், திருமணம் நடந்ததற்கான சான்றுகளுடன் (திருமண அழைப்பிதழ், ஆலயங்களில் வழங்கப்படும் ரசீதுகள், பிற ஆவணங்கள்), அந்த திருமணப் பதிவாளரின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் மணமகன்/மணமகள் வசிப்பதற்கான சான்றிதழ் அல்லது திருமணம் நடைபெற்றதற்கான சான்று ஆகியவற்றுடன் திருமணப் பதிவாளருக்கு விண்ணப்பித்தால் திருமணம் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
கிறிஸ்தவ திருமணத்தை பதிவு செய்தல்.
கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்படி கிறிஸ்தவர்களின் திருமணத்தை நடத்திவைக்கும் அதிகாரம் அரசு அங்கீகாரம் பெற்றுள்ள மதகுருமார்களுக்கும், திருமணப்பதிவாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மணமக்கள் இருவருமோ அல்லது மணமக்களில் எவராவது ஒருவர் கிறிஸ்தவராக இருக்கும் நிலையில் கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்கீழ் திருமணம் செய்வதை சட்டம் அங்கீகரிக்கிறது. ![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpNfTWDwpRWiaa6wNQmKEJXltRjKnYkgxMUT1ufOEnw_e3_DBZU4EsVivsMMUjaFz4J0UuYq948O6hz8LiNhIoYaRFb7xmJhUFn-ZhnEPhNFX3swrRCp5qwwLUUXusu5qMfI5s9QZeZ_w/s400/india10lg.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpNfTWDwpRWiaa6wNQmKEJXltRjKnYkgxMUT1ufOEnw_e3_DBZU4EsVivsMMUjaFz4J0UuYq948O6hz8LiNhIoYaRFb7xmJhUFn-ZhnEPhNFX3swrRCp5qwwLUUXusu5qMfI5s9QZeZ_w/s400/india10lg.jpg)
உரிய வயதடைந்த மணமக்கள், தாங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவது குறித்து எழுத்துப்பூர்வமான அறிவிப்பை மாவட்ட திருமணப்பதிவாளரிடம் வழங்க வேண்டும்.
அந்த அறிவிப்பில் திருமணம் செய்துகொள்ளவிரும்பும் நபர்களின் பெயர், தொழில் அல்லது நிலை, வசிப்பிடம், அந்த இடத்தில் வசித்த காலம், திருமணம் நடத்தவேண்டிய இடம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
அதன் நகல் திருமணப்பதிவாளரின் அலுவலகத்தில் பொதுப்பார்வைக்கு வைக்கப்படும். இந்த திருமணத்திற்கு ஏற்கத்தகுந்த மறுப்புகள் இல்லாத நிலையில் இந்த திருமணத்தை நடத்துவற்கான சான்றிதழ் வழங்கப்படும்.
இதையடுத்து இந்த திருமணம் அங்கீகரிக்கப்பட்ட மதகுரு அல்லது திருமணப்பதிவாளரால் நடத்தி வைக்கப்படும்.
இந்த திருமணத்திற்கான சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்பட்ட திருமண பதிவாளர்கள் அல்லது மதகுருக்களிடமிருந்து பெறப்பட்டு அதன் நகல்கள் பதிவுத்துறை அலுவலகத்தின் மூலமாக வழங்கப்படும்.
இஸ்லாமியத் திருமணங்கள்
இஸ்லாமியத் திருமணங்கள் முழுமையாக மதம் சார்ந்த நடவடிக்கைகளாகவே உள்ளன. மணப்பெண்களுக்கு மஹர் எனப்படும் மணக்கொடை கொடுத்து மணப்பெண்ணின் சம்மதம் பெற்ற பின்னரே திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. ![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBXBWuoQQ-I8cnOmwZ0VI8rGVebXHM14tw4H8_qiapv13f-B6fxIOY1Rq2Dc6QR_DYmG8xDeL9fN5EJVvGlS91mGbaLon22ocP3xue_DkY7vGkVOMFq-M7eY9JoibKpCmUgIrmEQIrTQ4/s400/muslim_wedding.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBXBWuoQQ-I8cnOmwZ0VI8rGVebXHM14tw4H8_qiapv13f-B6fxIOY1Rq2Dc6QR_DYmG8xDeL9fN5EJVvGlS91mGbaLon22ocP3xue_DkY7vGkVOMFq-M7eY9JoibKpCmUgIrmEQIrTQ4/s400/muslim_wedding.jpg)
இந்த திருமணங்கள் "நிக்காஹ் பதிவுப் புத்தக"த்தில் பதிவு செய்யப்படுகிறது.
இஸ்லாமியத் திருமணங்களை ஆண்கள் ரத்து செய்வதற்கு நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை என்ற நிலை இருப்பதால் பதிவுத்துறை அலுவலகங்களில் திருமணப்பதிவு அவசியமாக்கப்படவில்லை. எனினும் இஸ்லாமிய பெண்கள் திருமணத்தை ரத்து செய்யும்படி கோரினால் திருமணம் நடந்தததாக நிக்காஹ் பதிவுப் புத்தகத்தில் உள்ள பதிவு சான்றாக ஏற்கப்படுகிறது.
(குறிப்பு: மிகவிரிவான ஒரு தலைப்பு, மிகச்சுருக்கமாக எழுதப்பட்டு்ள்ளது. ஐயங்களை மறுமொழிப்பெட்டியில் இட்டால் உரிய பதில்களை தேடி வழங்குவதற்கு முயற்சிக்கிறேன்)
இயற்கைக்கு மாறான பாலுறவும், இந்தியச் சட்டங்களும்...!
காமசூத்திரம் படைத்த இந்தியாவில், தற்போது காமத்தைப் பற்றிய அறிவு சமூகத்தில் எந்த அளவுக்கு உள்ளது என்பது உடலியலாளர்களும், உளவியலாளர்களும் கருத்து சொல்ல வேண்டிய முக்கிய அம்சமாகும்.
.மறைந்த மருத்துவர் மாத்ருபூதம், மருத்துவர் நாராயண ரெட்டி போன்றவர்கள் பாலியல் குறித்து வெளிப்படையாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பேசத்தொடங்கியவுடன் பாலியல் குறித்த விவாதங்கள் பொதுத்தளத்தில் அதிகரிக்கத் தொடங்கின. எனினும் ஓரினச்சேர்க்கை போன்ற சிறுபான்மை பாலுறவு குறித்து பரவலான விவாதங்கள் நடைபெறுவது அரிதாகவே உள்ளது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNFGKRr656I-OhccU3dhJEOQnASIbcm1vn5JKzi1jhshAf_7i7rjQz31LknSq0yiXwf7Cuvj8lJwHGcHmrJwKr2GP6MaEj5f3vzCcmVzsECI-Pzh_nd-hXWuo125h7bnM2J9cor4DBiRM/s400/ii-m-not-gay-posters.jpg)
இத்தகைய தளத்தில் ஈடுபடுவோரும், ஓரினச்சேர்க்கையாளராக அடையாளம் காணப்படும் வாய்ப்பிருப்பதால், இது குறித்து பரவலான விவாதங்கள் எழுப்பப்படவில்லை என்றே தோன்றுகிறது.
.
சட்டத்தின் பார்வையில்.....
பாலியல் குறித்த விவ(கா)ரங்கள் சட்டத்தின் பார்வையில் சற்றும் தெளிவில்லாமலே, சற்றுக் குழப்பமாகவும்கூட உள்ளது என்பதே உண்மை.
இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377, “இயற்கை முறைக்கு மாறாக, ஆடவன் அல்லது பெண் எவருடனேனும், விலங்கு எதனுடனேனும் தன்னிச்சையாக காமவிகார உடலுறவு கொள்கிற எவரொருவரும் ஆயுள் சிறை தண்டனை; அல்லது 10 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை ஆகிய இவற்றில் இரண்டில் ஒன்றை தண்டனையாக விதிக்க வேண்டும். மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்”![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1fGaKfe7qpgu2vqxI2NXpfbBx89j9tTNo8l_UZzB5VKQSR-EjcKpJiYlRlUpq5Yc6lrySgbx5j-jlJR-xyGWbQZzB_MvjqEPNJxrnZbLf_1v8I1cLbn_0H2AKHZTScs2ot2ivKBdBzag/s400/gay-prague.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1fGaKfe7qpgu2vqxI2NXpfbBx89j9tTNo8l_UZzB5VKQSR-EjcKpJiYlRlUpq5Yc6lrySgbx5j-jlJR-xyGWbQZzB_MvjqEPNJxrnZbLf_1v8I1cLbn_0H2AKHZTScs2ot2ivKBdBzag/s400/gay-prague.jpg)
மேற்கூறிய சட்ட வாசகத்தில் “இயற்கை முறை” என்று கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடருக்கு விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. எனவே இயற்கை முறைக்கு மாறாக என்ற வாசகத்திலும் தெளிவில்லை. இந்த குழப்பம் தங்கள் வாழ்வுரிமையை பாதிப்பதாகவும் எனவே இந்த சட்டப்பிரிவை திருத்த வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்று குரல்கள் தற்போது வலுத்து வருகின்றன.
குறி்ப்பாக திருநங்கைகள் (அ) அரவானிகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆகிய இருதரப்பினரே இந்த சட்டப்பிரிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYZYa90f3HnKXV7jWdXLQ9pQWCEzCE0Zyw6ksXHk6nGGqDiVnET8Kcvty5LuyoR92htmv5RpuqOt0Qp5Fats04q-DH5pGoCuLBs7SG3KBAJE9_quD4qmxTv8VQDMsE94QWSTvS9yczHaw/s400/TransgenderSymbol%5B1%5D.png)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYZYa90f3HnKXV7jWdXLQ9pQWCEzCE0Zyw6ksXHk6nGGqDiVnET8Kcvty5LuyoR92htmv5RpuqOt0Qp5Fats04q-DH5pGoCuLBs7SG3KBAJE9_quD4qmxTv8VQDMsE94QWSTvS9yczHaw/s400/TransgenderSymbol%5B1%5D.png)
இதைக்குறித்து பார்க்கும் முன்னர், இயற்கை முறை உடலுறவு என்பதற்கு இதுவரை நீதிமன்றங்கள் கொண்ட பொருளை பார்க்கலாம்.
மனிதனைத்தவிர அனைத்து உயிரினங்களும் உடலுறவை, இனப்பெருக்கத்திற்கான வழிவகையாகவே பயன்படுத்துகின்றன. மனிதன் மட்டுமே உடலுறவை பெரும்பாலான நேரங்களில் இன்ப நுகர்வுக்கான வழியாகவும், மிகச்சில நேரங்களில் கோபத்தை வெளி்க்காட்டும் வழியாகவும் (உ-ம்: காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நிகழும் பாலியல் வன்முறை) பார்க்கிறான். எனவே மனிதத்தன்மையை எடுத்துவிட்டால் இனப்பெருக்கத்திற்கு செய்யப்படும் உடலுறவு மாத்திரமே இயற்கையானதாகும். ![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNNUijBvIgH36qRg7k_polPlb4FKyNC7uAAmGHIxY813Zd01IwYZDvihaF1EiCMHV5SHSpE2kv9LFyuOsrcpDa1ishWgZPjLVr2bEeQiLQUmId8jKOjHWVI7ycdPO4k4JewYdJG-WISQw/s400/hands.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNNUijBvIgH36qRg7k_polPlb4FKyNC7uAAmGHIxY813Zd01IwYZDvihaF1EiCMHV5SHSpE2kv9LFyuOsrcpDa1ishWgZPjLVr2bEeQiLQUmId8jKOjHWVI7ycdPO4k4JewYdJG-WISQw/s400/hands.jpg)
இந்த அளவுகோலின்படி பார்த்தால் அரசு அமைப்புகளே வலியுறுத்தும் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாடு வழிவகைகள் அனைத்துமே இயற்கைக்கு மாறான வகையைச் சேர்ந்ததுதான். இந்த தவறுக்காக மக்களை தண்டிப்பது என்பது நடைமுறையில் இயலாத காரியம். மேலும் இந்த நிலைப்பாட்டை தற்போதைய நிலையில் யாரும் ஏற்க முடியாது. ![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIWde1EXDSCtMAeCWeSliJf23e5OeBWy95tzuN8ByOnE7HjZiLyUcwq45Hsk8sL10Cio_j1GAm_2mt1vQKXkCJ9702nsmBEMFNAo_msyhLTUITEPshj2uR_VbnCNJz2ENjSmTviPMJv3Q/s400/TRANSLogo2.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIWde1EXDSCtMAeCWeSliJf23e5OeBWy95tzuN8ByOnE7HjZiLyUcwq45Hsk8sL10Cio_j1GAm_2mt1vQKXkCJ9702nsmBEMFNAo_msyhLTUITEPshj2uR_VbnCNJz2ENjSmTviPMJv3Q/s400/TRANSLogo2.jpg)
திருநங்கைகள்
இந்நிலையில் திருநங்கைகள் (அ) அரவானிகளின் தரப்பு வாதத்தை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
திருநங்கைகளுக்கு ஆண்-பெண்ணுக்குரிய பாலுறுப்புகள் இருப்பதில்லை. இருந்தாலும் அவை பயன்படுவதில்லை. அதற்காக அவர்களுக்கு பாலுணர்வே இல்லாமல் போய்விடுவதில்லை. ஏனெனில் பாலுணர்வு என்பது உடல் மட்டுமே சார்ந்தது அல்ல! மனமும் முக்கிய பங்கு வகிக்கும் பாலுணர்வு வேட்கை திருநங்கைகளுக்கும் இருக்கும் என்பதே மருத்துவ உண்மை. ![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkeNjahYkyie01m3Scn2r29_bAW0ZmEMtN02uR71ii7BhHfE_BhOp8Rsqwfr0Y388zh4oEedMPI0Qx5g7x_rEllSuPQjqrzR4WazIC4mhWm108HXe45SUx2OJG_wdurLhfUjnujgRwibI/s400/610x.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkeNjahYkyie01m3Scn2r29_bAW0ZmEMtN02uR71ii7BhHfE_BhOp8Rsqwfr0Y388zh4oEedMPI0Qx5g7x_rEllSuPQjqrzR4WazIC4mhWm108HXe45SUx2OJG_wdurLhfUjnujgRwibI/s400/610x.jpg)
ஆனால் இந்த திருநங்கைகள் எந்த விதத்தில் பாலுணர்வு வேட்கையை தணிக்க முயற்சித்தாலும் மேற்கூறிய சட்டத்தின் பார்வையில் அது குற்றமாகவே இருக்கிறது.
திருநங்கைகள் யாரும் விரும்பி திருநங்கைகளாக பிறப்பதில்லை. இயற்கையின் போக்கில் காரணம் புரியாத விந்தைகளில் ஒன்றாகவே திருநங்கைகள் உருவாவதும் உள்ளது. அதற்காக திருநங்கைகளுக்கு உயிரின் அடிப்படை வேட்கையான பாலுணர்வு வேட்கை இருக்கக்கூடாது என்றும் எதிர்பார்க்கக் முடியாது. ![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfGdmVX0mciHKnhMJbGQeDdSqIqawGM18owgnCAbHKhBNb1_eZ1VwTJmYfM71eT2p2w6_Jb-Aw4bZtI5yf5GU_utMEr8kwUJHNp9tjCw7Z-e1UGM_D0_3US4PYdd9Z8oacvuA0ltAlArU/s400/transgender.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfGdmVX0mciHKnhMJbGQeDdSqIqawGM18owgnCAbHKhBNb1_eZ1VwTJmYfM71eT2p2w6_Jb-Aw4bZtI5yf5GU_utMEr8kwUJHNp9tjCw7Z-e1UGM_D0_3US4PYdd9Z8oacvuA0ltAlArU/s400/transgender.jpg)
இயற்கைக்கு மாறான பாலுறவு என்ற பெயரில் திருநங்கைகளின் பாலுணர்வு வேட்கைகளை தடைசெய்யும் சட்டங்களை அமல்படுத்தும் முன்னர், அந்த திருநங்கைகளின் பாலுணர்வு வேட்கையை தணிப்பதற்கான வழியையும் காட்டவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் உள்ளது.
ஓரினச்சேர்க்கையாளர்கள்
அதேபோல ஓரினச்சேர்க்கையாளர்களும் இந்த சட்டத்தால் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். திருநங்கைகளை சகித்துக் கொள்பவர்கள்கூட ஓரினச் சேர்க்கையாளர்களை ஏற்க மறுக்கின்றனர்.
சமூகத்தில் ஓரினச் சேர்க்கையினரை பார்க்கும் விதத்திலேயே பல பிரசினைகள் உள்ளன. தன்பாலின இச்சை என்பது தீய பழக்கம் என்று ஒரு தரப்பினரும், அது ஒரு நோய் என்று ஒரு தரப்பினரும் கருதுகின்றனர். ஆனால் ஓரினச்சேர்க்கை என்பது இயற்கைக்கு மாறானது என்பதில் பெரும்பாலானோர் ஒருமித்த கருத்து கொண்டுள்ளனர். ![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimCOhztzIT-teWMi1FskFhR0UC73XqeCDKtzmUV4SoLuXT6YJRN3GKgamEm9s7U5AQHa7tt8npHqwecQymATfM08u98_Xz5s2kemN3cJ9aIlNCcBhEUcnF3QuQCxRyVsstFJMBhabltvI/s400/gay-boys.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimCOhztzIT-teWMi1FskFhR0UC73XqeCDKtzmUV4SoLuXT6YJRN3GKgamEm9s7U5AQHa7tt8npHqwecQymATfM08u98_Xz5s2kemN3cJ9aIlNCcBhEUcnF3QuQCxRyVsstFJMBhabltvI/s400/gay-boys.jpg)
இந்த கருத்தின் அடிப்படையிலேயே இந்திய தண்டனை சட்டம் இயற்றப் பட்டுள்ளது. இங்கிலாந்தின் அடிமை நாடாக இந்தியா இருந்த காலத்தில் “மெக்காலே” என்பவரால் எழுதப்பட்ட இந்த சட்டம் கிறிஸ்தவ மதக்கொள்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. இந்தியாவிலும்கூட இத்தகைய இயற்கைக்கு மாறானதாக கூறப்படும் பாலுறவை எதிர்ப்பவர்கள், மதம் சார்ந்த இலக்கியங்களிலேயே இத்தகைய உறவுகள் இருப்பதை வசதியாக மறந்து விடுகின்றனர். ![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNhU38j1R1Ig56EGlf7QD4r_7iIrRj91ef1OaCw3dXu2lEjWKdDqMBMbE_5Dv9rZtDbQq-HtQNpERM_ztkEkz9GO9x3j5XkzmrPbNLEi8lv-FZbCV9wCkujhNTv-n2qsIvv_h-tH3jh2I/s400/NandaDeviTemple07.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNhU38j1R1Ig56EGlf7QD4r_7iIrRj91ef1OaCw3dXu2lEjWKdDqMBMbE_5Dv9rZtDbQq-HtQNpERM_ztkEkz9GO9x3j5XkzmrPbNLEi8lv-FZbCV9wCkujhNTv-n2qsIvv_h-tH3jh2I/s400/NandaDeviTemple07.jpg)
மேலும் இத்தகைய பாலுறவுகளை அங்கீகரிப்பதும், தண்டிக்காமல் விடுவதும் இத்தகைய இயற்கைக்கு மாறான பாலுறவை அதிகரிக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப் படுகிறது.
ஆனால், “தன்பாலின இச்சை” இல்லாதவர்கள் யாரையும், இத்தகைய பாலுறவுக்கு ஆட்படுத்த முடியாது என்றே, ஓரினச் சேர்க்கையாளர்கள் கூறுகின்றனர். இதனை மருத்துவம் மற்றும் உளவியல் நிபுணர்களும் ஆதரிக்கின்றனர். ![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqI4NZoQZrMS6N_wtejEduzT5zJVZyyox5Md8WUlHXHFa4gpFn9uqT_C7V4CWsvtztMc07dqVlqIcVRe586AmN17EumuSzFAtvCbWthflxyBX1ikY2qWhEdRJhQg8O8T47k3RmaThsHPM/s400/Lesbian%2520wedding+Dolls.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqI4NZoQZrMS6N_wtejEduzT5zJVZyyox5Md8WUlHXHFa4gpFn9uqT_C7V4CWsvtztMc07dqVlqIcVRe586AmN17EumuSzFAtvCbWthflxyBX1ikY2qWhEdRJhQg8O8T47k3RmaThsHPM/s400/Lesbian%2520wedding+Dolls.jpg)
அவ்வாறு தன்பாலின இச்சை இல்லாதவர்களை, இயற்கைக்கு மாறான பாலுறவுக்கு ஆட்படுத்த விழையும் நபர்களை தண்டிக்க பல வழிகள் உள்ளன. இத்தகைய சந்தர்ப்பத்தில் தன்னை தற்காத்துக் கொள்ள விரும்பும் ஒரு நபர், எதிராளிக்கு மரணத்தை ஏற்படுத்திவிட்டால்கூட அது கொலை ஆகாது என்பதே சட்டமாக உள்ளது. (இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு: 100)
இந்த சட்டப்பிரிவின்படி, “இயற்கைக்கு மாறான காம இச்சை”யுடன் தாக்கும் ஒரு நபரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற சூழலில், தம்மை தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுபவரின் செயற்பாட்டில் எதிரி இறந்து விட்டாலும் அது கொலை ஆகாது. அதற்கு பதிலாக “கொலை ஆகாத மரணம் ஏற்படுத்தும் குற்றம்” என்பதாகவே கருதப்படும்.
எனவே, இயற்கைக்கு மாறான பாலுறவை தடை செய்யாவிட்டால், அத்தகைய இயற்கைக்கு மாறான பாலுறவு அதிகரித்து விடும் என்ற அச்சம் மறைந்து விடுகிறது.
அடுத்தது என்ன?
இந்த நிலையில் பாலியல் சிறுபான்மையினராகிய திருநங்கைகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377-ஐ நீக்க வேண்டும் என்ற கருத்திற்கு பல பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் நீங்களும் ஆதரவு தெரிவிக்கலாம். ![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgG7F5WAIerKdZ6p4Jj4CbNl4unqAGkR5g-tFqwhC9L5kusd0WQWFNVaRhowIOMJHpxEhveOgPGOVLmxjyyz8z7SwwtnPFjcuDQ6xiSTQgRgkGXYuR8UvMiLnXuaHi8CehT1c_4LnDeu9s/s400/bruplogo.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgG7F5WAIerKdZ6p4Jj4CbNl4unqAGkR5g-tFqwhC9L5kusd0WQWFNVaRhowIOMJHpxEhveOgPGOVLmxjyyz8z7SwwtnPFjcuDQ6xiSTQgRgkGXYuR8UvMiLnXuaHi8CehT1c_4LnDeu9s/s400/bruplogo.jpg)
அதேபோல, ஓரினச் சேர்க்கையாளர்களையோ, திருநங்கைகளையோ நேரில் அடையாளம் காணும் தருணங்களில் அருவருப்போ, அச்சமோ அடையாமல் அவர்களையும் சாதாரண மனிதர்களே என்று ஏற்றுக் கொள்வது உங்கள் அறிவு விசாலமடைவதை குறிக்கும். அவர்களுடன் இயல்பாக பழக முயற்சிப்பது உங்கள் மனிதாபிமானத்தை காண்பிக்கும்.
-சுந்தரராஜன்
Nice & very useful articles
பதிலளிநீக்கு