திங்கள், 4 மார்ச், 2013

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி துண்டு பிரசுரம் வினியோகம்


பூரண மதுவிலக்கை வலியுறுத்தி
துண்டு பிரசுரம் வினியோகம்
ஊட்டி, மார்ச் 4:
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு சங்கம் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஊட்டியில் நடந்தது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி சென்னையில் காந்தியவாதி சசிபெருமாள் கடந்த 33 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சசி பெருமாள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தமிழக அரசு உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும் ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம், கூடலூர் நுகர்வோர் மனிதவள பாதுகாப்பு மையம் மற்றும் நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் மதுவிலக்கின் அவசியம் குறித்த தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று ஊட்டியில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார். ஏ.டி.சி., சேரிங்கிராஸ் மத்திய பஸ் நிலையம் உள்ளிட்ட ஊட்டி நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மலைச்சாரல் கவிமன்ற தலைவர் சோலூர் கணேசன், ராஜூபெட்டன், கேத்தி நஞ்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக